Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, March 6, 2026
நெற்றிக்கண் திறக்கும் வழி - பாகம் 5
நெற்றிக்கண் திறக்கும் வழி - பாகம் 5
வள்ளலார் உரை நடையில் கூறியிருப்பதாக அவரது அணுக்க தொண்டர்களால் பதிவு செய்யப்பட்ட தகவல் :
" �நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணை ஆச்சாரியன் அனுக்கிரத்தால் திறக்கப் பெற்றுக்கொள்வது நலம் " .
இதன் பொருள் யாதெனில் : ஆச்சாரியன் = குரு என்பவர் ஆவார் . அப்படியெனில் குரு என்பவர் யார்: யார் குருட்டினை நீக்குபவரோ , அவரே குரு.
" குருட்டினை நீக்கும் சத்தி கண்மணிகளுக்கு உண்டு."
அப்படியெனில் வள்ளலார் முகத்திலிருக்கும் கண்மணியாகிய குருவைக் குறிப்பிடுகின்றாரே அல்லாமல் புறத்திலிருக்கும் ஒரு மனிதர் அல்ல என்பதை சன்மார்க்கத்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
வள்ளலார் தன் மெய்யருள் வியப்பு 28 ஆம் பாடலில் :
என் கண்மணியுள் இருக்கும் தலைவா - நின்னைக் காணவே
என்ன தவம் செய்தேன் முன் அரியும் அயனும் நாணவே
இதனைப் புரிந்து கொள்ளாமல் மூத்த சன்மார்க்கத்தவரும் மற்றும் பலரும் , இந்த கண் பயிற்சியை நம்புவதே இல்லை - இது வள்ளலார் பயிற்சியே அல்ல என்று வள்ளலார் space இணையதளத்தில் எழுதி வருகிறார்கள்
உண்மை தெரியக்கூடாது என்பதைக் காட்டிலும் , மற்றவர்கள் பெயர் வாங்கிவிடக் கூடாது என்பதில் மிக கவனத்துடன் இருக்கிறார்கள்
ஆனால் இதில் உண்மை இருக்கிறது - அன்பர்கள் சோதித்து தெரிந்து கொள்ளலாம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.