Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 4, 2026
சுத்த சன்மார்க்கமும் சைவ சித்தாந்தமும் – 2
சுத்த சன்மார்க்கமும் சைவ சித்தாந்தமும் – 2
முன்னர் கூறியபடி
சுத்த சன்மார்க்கம் சைவ சித்தாந்தத்தின் மேல் தான் கட்டப்பட்டுள்ளது
இதுக்கு மற்றொரு சான்று தான் இந்த பதிவு
சைவ சித்தாந்தத்தில் பிராசாத யோகம்
இதில் சந்திரனின் 16 சோடச கலைகள் நம் சிரசில் அமைப்பது அதன் அனுபவம் பயன் எல்லாம் அடக்கம்
இது திருமந்திரம் கலை நிலை என்ற தலைப்பில் கையாளப்பட்டுள்ளது
இதைத் தான் வள்ளல் பெருமான் தன் சத்ய ஞான சபையில்
8 வாயில் ,அதுக்கு 16 ஜன்னல் சாளரம் ஆக அமைத்து காட்டியுள்ளார்
ஜன்னல் வழியாக எப்படி ஒளி வெளிச்சம் வருமோ ??
அவ்வாறே 16 கலைகள் ஒளிகள் நம் உடலில் தவம் செய்தால் உண்டாகும் என்பதின் உட்பொருள் தான் இந்த ஜன்னல்
அருட்பா - “ அருள் விளக்க மாலை “
பகுதிபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
பரவிஎலாம் தன்மயமாம் படிநிறைந்து விளங்கித்
தகுதிபெறும் அப்பகுதிக் கப்புறமும் சென்றே
தனிஒளிச்செங் கோல்நடத்தித் தழைக்கின்ற ஒளியே
மிகுதிபெறு பகுதிஉல கம்பகுதி அண்டம்
விளங்கஅருட் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
தொகுதிபெறு கடவுளர்கள் ஏத்தமன்றில் நடிக்கும்
துரியநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே
இவைகள் தான் சந்திரனின் 16 பூரண கலைகள்
1. மேதை
2 அர்க்கீசம்
3 விட்டம்
4 விந்து
5 அர்த்த சந்திரன்
6 நிரோதினி
7 நாதம்
8 நாதாந்தம்
9. சத்தி
10 வியாபினி
11 வியோம ரூபினி
12 அனந்தை
13 அனாதை
14 அனாசிருதை
15 சமனை
16 உன்மனி (அ) மனோன்மணி
இவைகள் அனுபவத்துக்கு வந்தால் தான் மரணமிலாப்பெருவாழ்வு சாகாக்கல்வி – ஒளி தேகம் எல்லாம் சித்தி ஆகும்
அதனால் தான் 16 ஜன்னல்
சரி – அப்போ ??
சன்மார்க்கம் உரைக்கும் சமய மதம் பொய் என்பது எப்படி ஆச்சு ??
வெங்கடேஷ்
இதை படித்துவிட்டு , நம் அன்பர் தொடர்பு கொண்டு எதிர்ப்பு தெரிவிப்பர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.