Wednesday, March 4, 2026

ஆருத்ரா தரிசனம் – 2

ஆருத்ரா தரிசனம் – 2 “ வியாக்கிர பாதர் ” இவரும் பதஞ்சலி முனிவரும் சிதம்பரத்தில் சுத்த சிவத்தின் நடனம் கண்டதாக புராணங்கள் கூறுகிறது இதன் உண்மை என்னவெனில் ?? வியாக்கிர பாதர் என்பது மனிதர் அல்லர் அது தத்துவ விளக்கம் வியாக்கிரம் = புலி – சமஸ்கிருதத்தில் பாதர் = திருவடி புலி பாய்ச்சலுக்கு பெயர் போனது போல் , பார்வையும் பாய்ச்சலுக்கு பெயர் போனது அதனால் பார்வை புலிக்கு ஒப்பீடு செய்யப்பட்டது உவமானம் கொடுக்கப்பட்டது பார்வையில் திருவடி இருப்பதால் , வியாக்கிர பாதர் என்று மனித உருவகம் செய்யப்பட்டது பார்வை திருச்சிற்றம்பலத்தில் வரை ஏறி அதனுள் புகுந்து சிவத்தின் அசைவை நடனத்தை அங்கு கண்டது , களித்தது என்பது பொருள்   கடவுளர்கள் யார் ?? ஐந்து தொழில் செயும் ஐவர் தான் படைத்து காத்து கரந்து மறைத்து அனுகிரகம் புரி ஐவர் தான் அயன் மால் ருத்திரன் மகேஸ்வரன் சதாசிவன் வெ ங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.