Monday, March 9, 2026

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 ஆன்ம தரிசனம் வேணுமே மயிர்ப்பாலம் நெருப்பாறேக மெய்வலுவில் ஊசிமுனை வாசியேறத் தோணுமே நாமிருந்த இடங்கள் தானும் தொந்தத்தோம் என்றாடிடுமே சுலபமாக காணுமே தீபவொளி கருத்துங்காணும் கள் கஞ்சாக்கொண்டது போல மயக்கங்காணும் வீணுமேயாகாது மயக்கம் வேண்டாம் வேதாந்தம் கண்டிடலாம் வாசிபாரே அதாவது , வாசியானது மயிர்ப்பாலம் நெருப்பாறு கடந்து ஆன்ம நிலையம் அடையும் போது கள் கஞ்சா அடித்தாற் போல் மயக்கம் தரும் அதனால் பயிற்சி வீணா ? என கலக்கம் வேண்டாம் வாசி அனுபவத்தில் நின்றபடி இருப்பாயாக தீபவொளி = ஆன்ம ஜோதி வேதாந்த வீடு = வெட்ட வெளி - ஆன்ம நிலையம் தக்க குரு துணையுடன் பயிற்சி அறிந்து செய்ய வேணும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.