Monday, March 23, 2026

“அகலிகை புராணம் – சன்மார்க்க விளக்கம்”

அகலிகை புராணம் – சன்மார்க்க விளக்கம்” BG Venkatesh / June 21, 2018 ஆன்மாவை மீண்டும் உயிர்ப்பிக்கும் அற்புத சாதனா தந்திரம் ஆகும் இந்த புராணக் கதை கௌதம ரிஷி – அவர் தம் பத்னி அகலிகை – பேரழகி அவள் அழகில் மோகம் கொண்ட இந்த்ரன் – அவளை அடைய – அதிகாலை சேவல் போல் கூவ, ரிஷி தம் தவத்துக்கு நதிக்கரை செல்ல , இந்த்ரன் வீட்டுக்குள்ளே வந்து விடுகிறான் வந்திருப்பது இந்த்ரன் என தன் கற்பின் வல்லமையால் அறிந்து கொள்கிறாள் – கர்வமும் கூட அவனுடன் சேர்ந்து விடுகிறாள் ரிஷி காலை ஆகவிலை என திரும்ப வந்து – நடந்ததை அறிந்து – தன் மனைவிக்கு சாபம் கொடுக்கிறார் கல் ஆக சமைந்து போகிறாள் ராமன் பாதம் பட சாபம் நீங்கும் என்று சாப விமோசனம் அருள்கிறார் அவளும் கல்லாக இருந்து ராமன் பாதம் பட்டு பெண்ணாக மாறுகிறாள் இது புராணக் கதை இது ஓர் அதியற்புத கருத்தை விளக்க வந்த கதை ஆம் இதன் உண்மைப்பொருள் : கௌதம ரிஷி = ஆன்மா – ஆன்ம நிலை கௌதம மணி என்பது ஆன்மாவின் மற்றொரு பெயர் ஆம் இது நெற்றி்யில் தவத்தால் தோன்றும் மணி அதின் சக்தி அகலிகை அகல்யா – அகல் + ய ய = பத்தாம் வாசல் – சுழுமுனை அகலிகை – அகல் = மண் கை = சுழுமுனை அகலிகை என்பது சுழுமுனையில் இருக்கும் ஆன்மா – சக்தி அது உலக போகமாகிய இந்தரன் மீது ஆசை கொள்ள – அதனால் அவள் தன்னிலை இழந்து – தன் சக்தி இழந்து போகிறாள் – செயல் இழக்கிறது ” ராமன் ஆகிய சுத்த ஜீவன் – அது தன் கால் ஆகிய வாசி – இறை சுவாசம் அகலிகை மீது பட – ஊதச் செய – அது மீண்டும் உயிர் பெற்று விடுகிறது ” ஆன்மா மீண்டும் தன் சக்தி பெற்றுவிடுகிறது அதாவது இப்போது செயலிழந்த நிலையில் இருக்கும் ஆன்மாவை உயிர்ப்பிக்கும் அற்புத சாதனா தந்திரம் ஆகும் இந்த புராணக் கதை ஆனால்இப்போது யார் இதை இவ்வளவு தூரம் ஆய்வு செய்வது ?? வேகம் வேகம் வேகமான உலகம் – இதுக்கு நேரமிலை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.