Sunday, March 8, 2026

சிவவாக்கியர் பாடல் – ஆன்ம அனுபவம்

சிவவாக்கியர் பாடல் – ஆன்ம அனுபவம் நெற்றி பற்றி உழல்கின்ற நீலமாவிளக்கினை பற்றி ஒற்றி நின்று பற்றுத்தது எம் பலம் உற்றிருந்து பாரடா உள் ஒளிக்கு மேல் ஒளி அத்தனாய் அமர்ந்திட அறிந்தவன் அனாதியே விளக்கம் : திருவடி தவத்தின் பயனாய் அனுபவமாய் – நெற்றியில் நீல ஒளி தெரியும் அது தான் நீல நிற உடல் உடை ஸ்ரீ ராமன் ஆம் அதன் அனுபவம் : உலகத்துடன் பந்தம் அறுக்கும் பெண் மோகம் ஒழியும் 5 புலன் சேட்டை குறையும் சதா பர நினைவு இருக்கும் இது தான் சாதகன் பெறும் பலம் ஆம் அதை உற்று உற்று பார்த்து , பார்வை சுவாசம் கட்டி வைத்து தவம் செய்து வந்தால் , அதன் மேல் அனுபவமாய் ஆன்ம அனுபவம் சித்திக்கும் அந்த ஆன்ம அனுபவத்தில் நிலைத்திருக்க வல்லான் காலத்தை கடந்தவன் ஆகிறான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.