Thursday, March 5, 2026

பகிர்வு - திருவடி தவம் பெருமை

திரு BG வெங்கடேஷ் திருவடி தியான வழிகாட்டி முப்பது வருடங்களுக்கு மேலான அனுபவம் கொண்டவர்.இவரது அனுபவத்தை ஒன்று அல்லது இரண்டு எபிசொட் மூலம் அறிய முடியாது.இவற்றின் அனுபவத்தை அறிய நீங்கள் இவரின் https://1008petallotus.wordpress.com/ பார்த்து படித்து அனுபவம் கொள்ளவேண்டும்,இதுவரை 12000 பதிவுகளுக்கு மேலாக இந்த சைட் இல் பதிவு செய்து உள்ளார்கள் மேலும் இதுவரை 656,549 நபர்கள் இவரின் பதிவுகளை பார்த்து உள்ளார்கள், வாசி கிரியா என்று சொல்லி பல போலிகள் பணம் பார்த்து கொண்டு இருக்கும் இந்த சூழலில் இவரின் விளக்கம் உலகத்தை நம்பக்கூடாது என்பதை புலப்படுத்தும். பொறுமையாக மேற்கண்ட blogg படிக்கவும்.இவரின் 12000 பதிவுகளை வைத்து பல ஆயிரம் எபிசொட் டெலிகாஸ்ட் பண்ணலாம். "கர்மாவை அனுபவித்து தீர்க்க வேண்டிய அவசியம் இல்லை" என்ற தலைப்பில் வெளிவந்த முதல் எபிசோடில், BG வெங்கடேஷ் அவர்கள் கர்மா தொடர்பான வழக்கமான நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்து, ஒவ்வொரு செயலின் விளைவுகளையும் அனுபவிக்காமல் கர்ம சுழற்சிகளைத் தாண்டும் வழிகளை சன்மார்க்கத்தின் மூலம் விளக்குகிறார். உயர் விழிப்புணர்வு, ஆன்மிக பயிற்சிகள், பற்றின்மையை வளர்த்துக்கொள்வதன் மூலம் அனைத்து கர்ம பயன்களையும் அனுபவிக்காமலே தாண்ட முடியும் என்பதை கூறுகிறார். கர்மாவிலிருந்து விடுபட ஆன்மிக வளர்ச்சியை எவ்வாறு பயிற்சி மூலம் அடையலாம் என்பது இந்த எபிசோடின் முக்கியப் பகுதியாகும். "சுவாசம் நின்றால் தான் ஞானம் கிடைக்குமா?" என்ற தலைப்பில் உள்ள இரண்டாம் எபிசோடில், சுவாச கட்டுப்பாட்டின் மூலம் ஆன்மிக ஞானத்தை அடையும் முறையை BG வெங்கடேஷ் அவர்கள் ஆராய்கிறார். சன்மார்க்க யோக தொழில்நுட்பங்கள், தியானம், ஆழ்ந்த விழிப்புணர்வை எவ்வாறு சுவாச கட்டுப்பாட்டின் மூலம் பெற முடியும் என்பதற்கான தெளிவான விளக்கங்களை அவர் தருகிறார். மேலதிக ஆன்மிக தேடல்களிலும், சுவாச கட்டுப்பாட்டின் பயிற்சியை எப்படி தங்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்தலாம் என்பதையும் விளக்குகிறார். ஆழ்ந்த ஆன்மிக ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்த எபிசோடு மிகுந்த உதவியாக இருக்கும். மொத்தத்தில் BG வெங்கடேஷ் அவர்களின் இரு எபிசோட்களும் ஆன்மிகத்திற்கான தெளிவான விளக்கங்களும் சன்மார்க்கத்தின் ஆழமான எண்ணங்களை ஆர்வமுடன் கூறுவதாலும், தத்துவ விளக்கங்களையும் நடைமுறையான ஆன்மிக வழிகாட்டலையும் ஒருங்கிணைக்கும் ஒரு முக்கியத் தகவல்களைக் கொண்டவை. ஞானம் மற்றும் கர்மம் குறித்த அவரது தனித்துவமான அணுகுமுறைகள் காண்பவர்களை ஈர்க்கும் விதமாகவும், சன்மார்க்கப் பயிற்சிகளை தங்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்த தூண்டுகின்றன BG வெங்கடேஷ் அவர்கள், சென்னையில் பிறந்து படித்து தற்போது கோயம்புத்தூரில் வசிக்கிறார். தொழில்முறை ரீதியில் மெக்கானிக்கல் மற்றும் இன்டஸ்ட்ரியல் என்ஜினீயராகவும், ஆட்டோமொட்டிவ் துறையில் ஆலோசகராகவும் செயல்படுகிறார். ஆன்மிகப் பாசம், சன்மார்க்கம், வள்ளலாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகள், யோகா, தியானம் போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்ட இவர் இராமாயணம் மற்றும் மகாபாரதம் – சன்மார்க்கப் பார்வை மற்றும் ஒழிவில் ஒடுக்கமும் சன்மார்க்கமும் என இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். சன்மார்க்க உலகத்திலிருந்து பெரும் வரவேற்பு பெற்றுள்ள இவரின் கட்டுரைகள் அவரது வலைப்பூவில் பகிரப்பட்டுள்ளது. முத்தேக சித்தி மரணமில்லா உடலை அடைவதற்கான ஆராய்ச்சியில் ஆழ்ந்த இவர், அதற்கான அனுபவங்களை மற்ற சன்மார்க்கத் தோழர்களோடு பகிர்ந்து வருகிறார். ராஜா சிதம்பரம் மதுரை பகிர்வு

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.