Thursday, March 5, 2026

ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம்

ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம் சிவாயநம “சிவாயநம என்று சிந்தித்து இருப்பார்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை.” இது “ சிவயநம “ என சதா சாமானியர் வாயால் உரைப்பது அல்ல இது பயிற்சி குறிக்குது அதாவது , சிவய நம என்பது 5 இந்திரியங்களை குறிப்பதாகும் இதை தவத்தில் , ஒரு சேர பிரணவத்தில் கட்டி , அந்த வீட்டில் உறைந்து ஒரு ஆன்ம சாதகன் நின்றக்கால் , அவனுக்கு உலகாலும் மற்ற எந்த பொருளாலும் அபாயம் ஒரு நாளும் வராது 5 இந்திரியங்களும் தத்தம் இயல்பில் இருந்து மாறி – உலக நோக்காக இல்லாமல் – அக நோக்காக மாறிவிடுவதால் – அதனால் ஐம்புலன்களால் எந்த துன்பமும் இலை என்பதை உணர்த்துது இந்த குறள் ஐம்புலனும் செயல் இழந்துவிடுவதால் , மனமும் செயல் இழந்து விட , அதனால் ஒரு துன்பமும் இன்றாம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.