Sunday, March 8, 2026

மாணிக்க வாசகரும் - சிவவாக்கியரும் “

மாணிக்க வாசகரும் - சிவவாக்கியரும் “ “ திருவாதவூர் - திருப்பெருந்துறை – திருஉத்தரகோசமங்கை “ மூன்று வாசல் - சிவவாக்கியர் பாடல் “ நல்ல வாசலைத் திறந்து நாத வாசல் ஊடுபோய் எல்லை வாசல் கண்டவர் இனி மீண்டும் பிறப்பதில்லையே “ அவர் மூன்று வாசல்கள் திறக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார் நல்ல வாசல் = சுழிமுனை வாசல் - இதனுள் பிரவேசித்தால் தான் நாத நாடிக்கு செல்ல முடியும் இது தான் திருவாதவூர் நாத வாசல் = பிரமரந்த்ர வாசல் - இது திறந்தால் தான் ஆன்ம தரிசனம் கிட்டும் இது தான் திருப்பெருந்துறை எல்லை வாசல் = திருச்சிற்றம்பல வாசல் - இதனுள் பிரவேசித்தால் தான் அருட்பெருஞ்சோதி தரிசனம் கிட்டும் இது தான் திருஉத்தரகோசமங்கை நம் உடலில் இந்த மூன்று வாசல்களும் ஊரும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன ஞானிகள் உலகமயம் கருத்து ஒற்றுமை தான் இருக்கும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.