Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 10, 2026
திருப்பாதிரிப்புலியூர் சன்மார்க்க விளக்கம் “
திருப்பாதிரிப்புலியூர் சன்மார்க்க விளக்கம் “
இந்த கோவில் கடலூரில் இருக்கு
இங்கு புலிக்கால் முனிவர் எனும் வியாக்கிரபாதர் பூசித்த ஸ்தலம் என்பதாலும் இந்த ஊர்
சரி ஏன் புலியூர் ?? இது வித்தியாசமானதாக இருக்கு
வியாக்கிரபாதர் – மரத்தில் விழும் – வண்டுகள் உண்ட பூவை வைத்து இறையை பூசிக்க விரும்பாமல் , சிவத்தை நோக்கி தவம் இருந்து , இரவிலும் தெளிவான ” பார்வை ” , மரம் ஏறுவதுக்கான புலிக்காலும் நகமும் பெற்றதாக புராண வரலாறு
புராணத்தின் உண்மை விளக்கம் :
திருவடிகள் – பார்வை புலிக்கு உவமானமாக்கப்பட்டிருக்கு
புலி பார்வைக்கு பேர் போனது என்பதால் இந்த உவமானம்
புலி பார்வை - கால் – நகம் எல்லாமே திருவடி அதன் செயல்பாடு குறிப்பதாம்
அதாவது திருவடி பார்வை மேலேறுவதை தான் இவர் மரம் ஏறி பூ பறிப்பதாக காட்டப்பட்டுளது
இவர் சிதம்பரத்தில் சுத்த சிவத்தின் நடம் கண்டார் எனில் , ஆன்ம சாதகனின் பார்வை அவ்வளவு தூரம் மேலேறி – சிற்றம்பலம் நுழைந்து அங்கு சிவத்தின் திரு நடம் காண முடியும் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கவே இந்த புராணம்
ஆக வியாக்கிரபாதர் ஒரு தத்துவ உருவகம் அன்றி வேறிலை
திருவடி பயிற்சி விளக்க வந்த புராணம் ஊர்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.