Tuesday, March 3, 2026

திருவடியும் சுத்த தேகமும்

திருவடியும் சுத்த தேகமும் திருவெம்பாவை – திருப்பாவை – திருமந்திரம் ” 1 திருவெம்பாவை : செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் “ செங்கமலப் பொற்பாதந் “ தந்தருளுஞ் சேவகனை அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் பங்கயப்பூம் புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய் 2 திருப்பாவை 17 : அம்பரமே, தண்ணீரே, சோறே, அறஞ்செய்யும் எம்பெருமான் நந்தகோ பாலா, எழுந்திராய்! கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குல விளக்கே! எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய் அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்! “ செம்பொற் கழலடி “ செல்வா! பலதேவா! உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்! 3 திருமந்திரம் “ சிவயநம எனும் குளிகை இட்டு “ செம்பொன் “ ஆக்குவன் தன் கூட்டையே “ விளக்கமாக , செம்பொன் என்பது திருவடியின் வண்ணம் நிறம் அத்தகைய திருவடி ஒளியை தவத்தில் இறக்கி , சாதகன் உடல் முழுதும் பரப்பி , ஆன்மாவின் ஒளிமயமாக மாற்றம் செய்யலாம் என்றவாறு இது ஆன்ம தேகம் சுத்த தேகம் ஆகும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.