Saturday, March 14, 2026

திருவாசகம் - எட்டாம் திருமுறை, உயிருண்ணிப்பத்து

ஆன்ம சாதகன் இலக்கணம் ஸ்ரீமத் மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசகம் - எட்டாம் திருமுறை, உயிருண்ணிப்பத்து. வேண்டேன்புகழ் வேண்டேன்செல்வம் வேண்டேன்மண் ணும்விண்ணும் வேண்டேன்பிறப் பிறப்புச்சிவம் வேண்டார் தமைநாளும் தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு திருப்பெருந்துறை இறைதாள் பூண்டேன்புறம் போகேன்இனிப் புறம்போகலொட் டேனே விளக்கம் : ஆன்ம சாதகன் எதை பற்றணும் ?? எதை விடணும் ?? என் விரித்துரைக்கிறார் மாணிக்க வாசகர் பெருமான் 1 வேண்டாதது புகழ் செல்வம் மண்ணுலக விண்ணுலக வாழ்வு நாஸ்திகர் தம் தொடர்பு ( இன்றைய அரசியல்வாதியர் ) 2 வேண்டியது உச்சி குளமாகிய பெருந்துறை விளங்கு சிவத்தின் திருப்பாதம் திருவடி மட்டுமே அதுக்கு நான் ஐம்புலனை வெளியிலே புறத்திலே அலைய விடமாட்டேன் இது தான் வழி எப்படி ஆற்றுவது ? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.