Saturday, March 14, 2026

கண்மணி பெருமை “ - திருவாசகம் – புணர்ச்சிப் பத்து

கண்மணி பெருமை “ - திருவாசகம் – புணர்ச்சிப் பத்து அல்லிக் கமலத் தயனும் மாலும் அல்லா தவரும் அமரர் கோனுஞ் சொல்லிப் பரவும் நாமத் தானைச் சொல்லும் பொருளும் இறந்த சுடரை நெல்லிக் கனியைத் தேனைப் பாலை நிறைஇன் அமுதை அமுதின் சுவையைப் புல்லிப் புணர்வ தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே பொருள் : பிரம்மாவும் விஷ்ணுவும் மற்றும் இந்திரனும் போற்றும் சிவத்தை வாய் வார்த்தையால் விவரிக்க முடியா பொருளை – ஜோதியை அமுதை கனியை என் கண்மணியை சேர்த்து தவம் செய்து என்று நான் கலப்பேன் என தவத்தின் செயல்பாட்டை எடுத்துரைக்கிறார் மாணிக்க வாசகர் பெருமான் தவம் எப்படி இருக்கும் /செயணும் என வெளிப்பட உரைக்கிறார் மாணிக்க வாசகர் பெருமான் உலகத்துக்கும் உண்மைக்கும் வெகு தூரம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.