Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 3, 2026
திருமந்திரம் - ஆறாம் தந்திரம் - ஞாதுரு ஞான ஞேயம்
திருமந்திரம் - ஆறாம் தந்திரம் - ஞாதுரு ஞான ஞேயம்
வைச்சன வாறாறு மகற்றியே வைத்து
மெச்ச பரமன்றன் வியாத்தும் மேலிட்டு
நிச்சய மாகச் சிவமாக்கி நேயத்தா
லச்சங் கெடுத்தென்னை யாண்டன னந்தியே 1608
விளக்கம் :
உயிர் உடல் / பிறவி எடுத்த போது , அதனுடன் சேர்த்து வைத்த 36 தத்துவங்களையும் அகற்றி கழற்றி என்னை சுத்தன் ஆக்கி , மேலான பர / பரம நிலைக்கு மேலேற்றி , அதனுடன் கலக்க வைத்து அதன் மயமாக்கி , இனி பிறவி சுழலில் மீட்டும் வருமோ என்ற அச்சத்தை நீக்கி எனை ஆண்ட குரு நந்தி
இங்கு பரம நிலை நந்தி என்பன யாவும் ஆன்மாவையே குறிக்குது
ஆன்மா செய்த அரும்பெரும் அனுபவத்தை உரைக்கிறார் மூலர் பெருமான்
வெங்கடேஷ்
சதாசிவர் – மகாசதாசிவர்
முதலாமவர் 5 தொழில் செய் தலைவரில் மூத்தவர்
உச்சத்தில் இருப்பவர்
5 முகங்கள் – 5 தொழில்களும் ஒருங்கே இயற்றும் வல்லமை உடைய்வர்
ஆயுள் – 43 20 000 ஆண்டுகள்
ஆனால் மகாசதாசிவர் ??
5 தொழில்கள் /முகம் * 5 = 25 முகம் / தொழில்
ஆயுள் – 1 60 00 000 ( ஒரு கோடி 60 லட்சம் ஆண்டுகள் )
இயற்கை பிரபஞ்சம் விசித்திரம் வினோதம் நிறைந்தது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.