Tuesday, March 17, 2026

ஞானியர் உலக மயம்”

ஞானியர் உலக மயம்” 1 சாலை ஆண்டவர் : 1 “ அசைவற்ற குணக்குன்றாம் பிரமம்தனில் “ 2 “ அசைவற்ற பிரம்மத்தில் காலந்தானும் யாவர்க்கும் எட்டாத தூரமே “ பிரம்மம் = ஆன்மா . அது அசைவற்றது 2 வள்ளல் பெருமான் - அருட்பா அறையாத மிகுபெருங்காற் றடித்தாலும் சிறிதும் அசையாதே அவியாதே அண்டபகிர் அண்டத் துறையாவும் பிண்டவகைத் துறைமுழுதும் விளங்கத் தூண்டாதே விளங்குகின்ற ஜோதிமணி விளக்கே மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே இறையாய்எவ் வுயிரகத்தும் அகப்புறத்தும் புறத்தும் இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே. இதில் “ அறையாத மிகுபெருங்காற் றடித்தாலும் சிறிதும் அசையாதே அவியாதே “ என்பது ஆன்ம ஜோதியைத் தான் குறிப்பிடுது ஞானியர் கருத்து வேறுபட மாட்டார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.