Monday, March 9, 2026

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 ஆன்ம தரிசனம் கண்டிடலாம் புருவமத்தி வாசலோரம் கண்ணிரண்டும் கூடிடும் ஞானக்கண்ணாம் உண்டிடலாம் ஞானரசம் கண்ணில்தானே உட்புகுந்து மேலேறும் வாசல் தாண்டு தெண்டுடனே கமண்டலமும் குகையும் வேண்டாம் சிறுகற்பம் அறுசுவையும் தள்ள வேண்டாம் மண்டுடனே கூடிடுவீர் ரசமே உண்பீர் வாருங்கள் தேனமுதம் உச்சி நீரே பொருள் : இரு கண்கள் சேர்ந்தால் ஞானக்கண் திறக்க வைக்கும் இந்த தவம் ஆற்ற குகையில் தண்டம் கமண்டலத்துடன் வாழ அவசியமிலை இல்லறத்திலேயே சாதிக்கலாம் இந்த தவத்தால் ஞானரசம் தேனமுதம் ஆகிய உச்சி நீராகிய அமுதம் பருகலாம் வாருங்கள் என உலகத்துக்கு அழைப்பு விடுக்கிறார் சித்தர் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.