Saturday, March 21, 2026

ஆன்மாவும் ஜீவனும் 6

ஆன்மாவும் ஜீவனும் 6 BG Venkatesh / July 2, 2018 ஆன்மாவும் ஜீவனும் 6 ஓருடலில் ஈருயிர் என்பதுக்கு பிரமாணங்கள் பல உள இதை ஒப்புக்கொள்ளா சன்மார்க்கத்தாரும் மற்றவரும் வள்ளலின் உரை நடை சரியாக புரிந்து கொள்ளவிலை என பொருள் ஆகும் பி 1 ராமாயணம் ராமன் – ஜீவன் ராவணன் – மனம் ரெண்டும் ஒன்று என்று கூறும் மனவளக் கலையும் மற்றவரும் – இந்த இதிகாசத்தை சரியாக புரிந்து கொளவிலை என்று தான் அர்த்தமாகிறது பின் எப்படி ரெண்டும் கதாபாத்ரம் உருவாக்கினார்கள் ?? ராமன் = ஜீவன் அகத்தியன் = ஆன்மா அதனால் தான் ராமன், ராவண வதத்துக்கு முன் சோர்ந்து இருந்த போது – ஆன்மாவாகிய அகத்தியர் வந்து அவர்க்கு தைர்யம் அளித்து – ஆதிதய் ஹிருதயம் போதித்து பலம் கூட்டினார் பி2 எல்லா ஞானிகள் – ” சாட்சியாக நிற்கப் பழகு ” ” செயலை செய்வது நீ இலை – நான் வெறும் சாட்சி தான் என்ற பாவனையில் நில் ” என்று தான் கூறுகிறார் அப்படியெனில் ” நீ ஜீவ நிலையில் இருந்து ஆன்ம நிலைக்கு உயர் ” என்று தான் பொருள் ஆம் பி 3 வள்ளல் பெருமான் தன்னின் அனேக பாடலில் ஆன்ம கலப்பு பாடி மகிழ்ந்துளார் அப்படியெனில் அவர் எந்த நிலையில் இருந்தார் ?? ஆன்மாவுடன் கலக்க ஆசைப்பட ?? ஜீவ நிலை தான் ஜீவன் ஆன்மாவுடன் கலக்கும் ஆன்மா பரமான்மாவுடன் கலக்கும் பி 4 வள்ளல் தன் உரை நடையில் – கீழ் நிலை சுக்கிலத்தை மேல் நிலை சுக்கிலமாக மாற்றிக்கொள்ளுங்கள் அவர் கூற வருவது ஜீவ நிலையாகிய நீங்கள் இருக்கும் கீழ் நிலை சுக்கிலத்தில் இருந்து மேல் நிலை ஆகிய ஆன்மா நிலைக்கு முன்னேறுங்கள் எங்கிறார் விந்து = ஆன்மா ஆகும் இன்னமும் அனேக பிரமாணங்கள் உள – விரிக்கில் 10 -15 பதிவுகள் தேவைப்படும் ஆனால் இதெலாம் என் வலை விரித்து உரை எழுதப்பட்டுள்ளது நேரம் காலம் கருதி இத்துடன் நிறுத்திக்கொள்ளப்படுகிறது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.