Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 21, 2026
ஆன்மாவும் ஜீவனும் 6
ஆன்மாவும் ஜீவனும் 6
BG Venkatesh / July 2, 2018
ஆன்மாவும் ஜீவனும் 6
ஓருடலில் ஈருயிர் என்பதுக்கு பிரமாணங்கள் பல உள
இதை ஒப்புக்கொள்ளா சன்மார்க்கத்தாரும் மற்றவரும் வள்ளலின் உரை நடை சரியாக புரிந்து கொள்ளவிலை என பொருள் ஆகும்
பி 1
ராமாயணம்
ராமன் – ஜீவன்
ராவணன் – மனம்
ரெண்டும் ஒன்று என்று கூறும் மனவளக் கலையும் மற்றவரும் – இந்த இதிகாசத்தை சரியாக புரிந்து கொளவிலை என்று தான் அர்த்தமாகிறது
பின் எப்படி ரெண்டும் கதாபாத்ரம் உருவாக்கினார்கள் ??
ராமன் = ஜீவன்
அகத்தியன் = ஆன்மா
அதனால் தான் ராமன், ராவண வதத்துக்கு முன் சோர்ந்து இருந்த போது – ஆன்மாவாகிய அகத்தியர் வந்து அவர்க்கு தைர்யம் அளித்து – ஆதிதய் ஹிருதயம் போதித்து பலம் கூட்டினார்
பி2
எல்லா ஞானிகள் – ” சாட்சியாக நிற்கப் பழகு ” ” செயலை செய்வது நீ இலை – நான் வெறும் சாட்சி தான் என்ற பாவனையில் நில் ” என்று தான் கூறுகிறார்
அப்படியெனில் ” நீ ஜீவ நிலையில் இருந்து ஆன்ம நிலைக்கு உயர் ” என்று தான் பொருள் ஆம்
பி 3
வள்ளல் பெருமான் தன்னின் அனேக பாடலில் ஆன்ம கலப்பு பாடி மகிழ்ந்துளார்
அப்படியெனில் அவர் எந்த நிலையில் இருந்தார் ?? ஆன்மாவுடன் கலக்க ஆசைப்பட ??
ஜீவ நிலை தான்
ஜீவன் ஆன்மாவுடன் கலக்கும்
ஆன்மா பரமான்மாவுடன் கலக்கும்
பி 4
வள்ளல் தன் உரை நடையில் – கீழ் நிலை சுக்கிலத்தை மேல் நிலை சுக்கிலமாக மாற்றிக்கொள்ளுங்கள்
அவர் கூற வருவது
ஜீவ நிலையாகிய நீங்கள் இருக்கும் கீழ் நிலை சுக்கிலத்தில் இருந்து மேல் நிலை ஆகிய ஆன்மா நிலைக்கு முன்னேறுங்கள் எங்கிறார்
விந்து = ஆன்மா ஆகும்
இன்னமும் அனேக பிரமாணங்கள் உள – விரிக்கில் 10 -15 பதிவுகள் தேவைப்படும்
ஆனால் இதெலாம் என் வலை விரித்து உரை எழுதப்பட்டுள்ளது
நேரம் காலம் கருதி இத்துடன் நிறுத்திக்கொள்ளப்படுகிறது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.