Saturday, May 9, 2026

சடங்கின் உண்மை - சன்மார்க்க விளக்கம் "

சடங்கின் உண்மை - சன்மார்க்க விளக்கம் " திருமணத்தின் போது - மணமகன் தாலி கட்டி முடித்த பின் - மணமகளுக்கு நெற்றிப்பொட்டு வைப்பது எப்படி செய்கிறான் ?? தன் வலது கையால் பெண்ணின் தலை சுற்றி வந்து , முடிவில் அவள் நெற்றில்யில் திலகம் வைக்கிறான் ஏன் ?? அதாவது ஆன்ம தரிசனம் ஆக வேண்டுமெனில் நம் சிரசில் வட்டம் போட வேண்டும் அப்படிப்போட்டால் தான் நெற்றிக்கண் திறக்கும் ஆன்ம தரிசனம் கிட்டும் என்பதை விளக்க வந்தது இந்த சடங்கு எல்லாவற்றிலும் ஞானம் புகுத்தபட்டிருக்கு நாம் தான் கண் விரித்து பார்த்து , சரியான பொருள் எடுக்க வேணும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.