Friday, May 22, 2026

குருவின் அவசியம் “

குருவின் அவசியம் “ உண்மைச் சம்பவம் சென்ற ஞாயிறன்று அபார்ட்மெண்ட்டில் பேச்சு ஆன்மீகம் – குரு – ஜக்கி என ஒரு சுற்று அப்போது ஒருவர் பெரியவர் குரு என்பவர் இடைத்தரகர் மாதிரி – அவர் எதுக்கு ?? என்றார் நான் : – நேற்று உங்கள் மகன் கார் ஓட்ட கற்றுக்கொண்டிருந்தாரே ?? எனக்கேட்டேன் அவர் : ஆமாம் – கார் ட்ரைவிங்கு ஸ்கூலில் வந்து கற்றுக்கொடுக்கிறார் நான் : ஏன் என்றேன் – அவராகவே கத்துக்கிட்டு ஓட்ட வேண்டியது தானே ? “ அவர் : எப்படி முடியும் ?? கத்துக்கொடுக்க ஆள் வேணும் என்றார் நான் : ட்ரைவிங்கு லைசென்ச் ஓட்டுனர் உரிமம் எப்படி எடுப்பீர்கள் ?? அவர் : ஒரு இடைத்தரகர் மூலம் தான் நான் : ஏன் RTO மூலம் நீங்களாகவே எடுக்க வேண்டியது தானே ?? அவர் : புரோக்கர்க்கு தான் என்ன வேணும் ?? எப்படி செய்வது ? யாரைப்பார்ப்பது என தெரியும் எவ்ளோ கட்டணம் நான் : உங்கள் மகன் எந்த காலேஜ் ?? அவர் : PSG Engg நான் : மேற்படிப்பு எங்கு ?? எப்படி ?? அவர் : அமெரிக்கா – அதுக்கு அவர் கல்லூரி பேராசிரியர்கள் உதவுகிறார்கள் நான் : ஏன் அவனாகவே முயன்று தெரிந்து கொண்டு போகலாம் அல்லவா ?? அவர் : எப்படி முடியும் ??? அவர்க்கு தான் இவன் படிப்புக்கு எங்கே எந்த கல்லூரி சரிப்பட்டு வரும் – நல்ல மதிப்பு – வேலை வாய்ப்பு தெரியும் நான் : இதுக்கெல்லாம் இடைத்தரகர் புரோக்கர் – விஷயம் தெரிந்தவர் வேணும் – ஆனால் கடவுள் எங்கே எப்படி இருக்கார் னு தெரியாது ? எப்படி அடைவது ? என்ன செய்தால் அடையலாம் னு தெரியாது ?? அதை சொல்லிக்கொடுக்கிறவர் – அவர் இடைத்தரகர் புரோக்கர் – அவர் வேணாமா ?? னல்ல வேடிக்கை நகைச்சுவை இலையா ?? அவர்க்கு கோவம் வந்து போய்விட்டார் இது தான் நிதர்சனம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.