Wednesday, May 6, 2026

காக புஜண்டர் ஞானம் 80 – 69

காக புஜண்டர் ஞானம் 80 – 69 குற்றமது வையாமல் அண்டத் தேகிக் கூறாத மந்திரத்தின் குறியைப் பார்த்துச் சித்தமொன்றாய் அந்திசந்தி யுச்சிக் காலம் தேவனுக்குப் பூசைசெய்து தெளிவு பெற்றுக் குற்றமது வையாமல் மனமன் பாலே குருபரனை நோக்கியடா தவமே செய்து பற்றாசை வைத்துமிகப் பார்க்கும் போது பராபரையுங் கைவசமே யாகு வாளே. பொருள் : மௌனத்தை கடைபிடித்து மனம் அது ஒன்றி – சோமசூரியாக்கினிகள் ஒன்று கூடும் உச்சியில் ஆன்மாவைக்கண்டு - ஆன்ம பூசை செய்து வரவும் , ஆன்ம குருவை நோக்கி அன்பால் தவம் செய்தும் – அதன் மேலாசை வைத்து “ கண்ணால் பார்த்து “ நின்றால் – பராபரையாம் வாலை கைவசமாவாள் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.