Wednesday, May 6, 2026

காக புஜண்டர் ஞானம் 80 – 15

காக புஜண்டர் ஞானம் 80 – 15 முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா! புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற் பூலோக மெல்லாந்தான் பணியு முன்னை; எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம் ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே. பொருள் : மந்திரத்தை நினைக்கும் போது மனம் இருமை என்னுன் நிலை எய்தும் அதனால் ஒருமை கிட்டா அதனால் மனதை சாதனா தந்திரத்தால் , தத்துவத்தில் இருந்து பிரித்து தனியாக இருக்க வைத்து – ஆன்மாவில் கலக்க வைத்தால் இந்த உலகம் உன்னை வணங்கும் சிரசுக்கு ஏறுகின்ற வாசி கற்ப தன்மை உடைத்து அதாவது பௌதீக சுவாசம் நின்று உள் சுவாசம் உண்டாகி , அது நாடி வழியாக சிரசுக்கு ஏறினால் அவன் கற்ப நிலை அடைந்ததாக பொருள் சுழுமுனை உச்சிக்கு வழி – எப்படி ?? எது எல்லாம் மேலேறும் ?? எப்படி ஏற்றுவது என ஆசான் கற்றுக்கொடுப்பார் அவன் நீண்ட நாள் வாழும் தேகம் அடைவான் என்பதுறுதி வெங்கடேஷ் Seen by 2

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.