Wednesday, May 6, 2026

காக புஜண்டர் ஞானம் 80 – 8

காக புஜண்டர் ஞானம் 80 – 8 வாறான பிரமத்தில் நடுவே மைந்தா! வந்ததடா ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிக் கூறாகப் பின்னியடா கீழே பாயுங் கூறுகிறேன் இருக்கண்ணில் ஒளிவைக் கேளு; வீறான அண்டவுச்சி முனைக்கப் பாலே வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே நேராக இருகண்ணிற் பின்ன லாகி நிச்சயமா யொளிவாகி நிறைந்தார் பாரே. பொருள் : இந்த பாடலில் நாடிகளின் உண்மை நிலவரம் பற்றி எடுத்துரைக்கிறார் ஆன்ம ஸ்தானத்தில் சோமசூரியாக்கினிக்கலைகள் ஒன்று கூடி கலந்து நிற்கும் – அது பின்னி பிணைந்து கீழ் இறங்கி கண்ணில் சூரிய சந்திரராய் - அதன் ஒளியாய் நிற்கும் மேலும் சுழுமுனையில் இருந்தும் இந்த கலைகளின் நாடிகள் விழுது போல் கீழ் இறங்கி இரு கண்னில் ஒளி விடும் பாரே இடகலை பிங்களை சுழுமுனை நாடிகள் குறித்து உரைக்கிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.