Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, May 15, 2026
குண்டலினி இருப்பிடம் – பதிவு
குண்டலினி இருப்பிடம் – பதிவு
“ அரவாமுதன் “ – பேர் சன்மார்க்க விளக்கம்
இது பிரபலமான வைணவ பெயராம்
இதன் சன்மார்க்க விளக்கம் யாதெனில்
அரவாமுதன் = அரவு + அமுதன்
அரவு = பாம்பு = குண்டலினி
அமுதன் = அமுதமாகிய கண்ணனாகிய ஆன்மா
ஆன்மா சிரசில் இருப்பதால் குண்டலினியும் அங்கு தான் இருக்கு என்பது உண்மை
இது காளிங்க நர்த்தனம் செய்த அழகிய கண்ணனை கண்ட பின் வைத்த பேர் ஆகும்
அதாவது குண்டலினி மீது அழகிய கண்ணன் ஆடல் நாட்டியம் செய்ததால் அரவாமுதன் என பேர் பெற்றான்
இது ய முனை நதியில் நடந்த சம்பவம்
குண்டலினி மல ஜலம் கழிக்கும் இடத்தில் இருக்கும் எனில் – யமுனை நதி அந்த நாற்றம் பிடித்த இடத்திலா இருக்கு??
கண்ணன் அந்த இடத்தில் தான் இருக்கின்றானா ??
யோசிக்க வேணும் மக்களே ??
“ எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு “
இந்த குறள் இந்த பதிவுக்கும் குண்டலினிக்கும் மிக பொருந்தும் ஆமாம்
வெங்கடேஷ் See
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.