Wednesday, May 6, 2026

மனம் எத்தகையது ?

மனம் எத்தகையது ? அதை அடக்க வேணும் என எண்ணியவுடன் அது எல்லா வில்லத்தனமும் ஆரம்பித்துவிடும் எப்படி கதா நாயகனும் நாயகியும் ஒன்று சேரவிடாமல் மாமியார் – நாத்தனார் இதர பேர்கள் எல்லா சதி - தீமைகள் திட்டம் போட்டு செயல்படுத்துவாரோ ?? அவ்வாறே தான் மனமும் மனமதை அடக்க வேணும் என்று நினைத்தவுடன் எல்லா மோகம் ஆசை கோபம் எல்லாம் அவிழ்த்துவிடும் பெண் போகம் /மோகம் அதிகமாக்கும் – விந்து விரயம் அதிகமாக்கும் உறக்கம் அதிகாக்கும் – சாதனம் தடுக்க போகம் – உலக – இந்திரிய போகம் நுகர்வு அதிகரிக்கும் சோம்பல் பசி அதிகமாக்கும் ராக துவேஷம் அதிகமாக்கும் நம்மை அறிவுடன் கலவாமல் பாத்துக்கொள்ளும் ஞானம் அடையா வண்ணம் பாத்துக்கொள்ளும் ஆன்மாவும் மனமும் ஒன்று சேரவே முடியாது ஆன்மா அறிவுமயம் ஒளிமயம் மனம் ஜடம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.