வளர்பிறையும் தேய்பிறையும் “
சாமானியர் தம் வாழ்வு
நிலவின் தேய்பிறைக்கு ஒப்பாம்
ஆயுள் – உடல் வனப்பு
நாளும் தேய்ந்து தேய்ந்து
முடிவில் ஒன்றுமிலா அழிந்து போம்
இது உலகம் அறிந்ததே
ஆனால்
ஞானியர் தம் வாழ்வோ
நாளும் வளரும் நிலா போல் ஆம்
சாதனா தந்திரத்தால் விந்து கலை வளர்த்து
அது பூரண சந்திரனாய்
முழு நிலவாய் ஜொலிக்க செய்கிறார்
தம் உடல் ஆயுள்
என்றும் 16 ஆக மாற்றிக்கொள்கிறார்
தேய்வுமிலை வளர்ச்சியுமிலை
என்றும் 16 மார்க்கண்டேயன் ஆகிறான்
இருவரும் இரு துருவம் தானே ??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.