இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 85
நம் திருவிழாவின் போது ஒரு விளையாட்டு வைப்பார்கள்
ஒரு கம்பம் அதன் உச்சியில் பரிசுப்பொருள்
யார் மேலேறி எடுக்கிறாரோ அவர்க்கே பரிசு
ஆனால் மேலேற மேலேற நீர் ஊற்றி சறுக்க வைப்பர் ஊர் மக்கள்
ஆனாலும் மிகவும் சிரமப்பட்டு அதெல்லாம் மீறி சிலர் வெற்றி பெறுவர்
இது என்ன சொல்ல வருது எனில் ?
அந்த கம்பம் – சுழுமுனை கம்பம் ஆம்
அதுவும் வழுக்கும் சறுக்கும் குணம் உடைத்து
அதாவது ஏறுவது மிகவும் கடினம்
அதைக்குறிக்கத்தான் நீர் ஊத்தி சறுக்க வைப்பது
இந்த துன்பம் தடை மீறி ஆன்மா தரிசனம் பெற வேணும் என்பதைத்தான் இந்த விளையாட்டு குறிக்குது
எப்படி விளையாட்டில் ஞானம் கலந்துள்ளனர் நம் முன்னோர் ??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.