Wednesday, May 6, 2026

காக புஜண்டர் ஞானம் 80 – 62

காக புஜண்டர் ஞானம் 80 – 62 நிலையாத சமுத்திரமே சுழுத்தி யாச்சு; நின்றிலங்கும் வாசியைத்தான் வெளியிற் சேரு தலையான அக்கினியப் படியே சேரு; சத்தியமாய் ரவிமதியைக் கூடச் சேர்த்து மலையாமல் ஏகபரா பரனே யென்று மனமடங்கி அண்டவுச்சி தன்னைப் பார்க்க அலையாது மனந்தானும் பரத்திற் சென்று ஆகாய வீதிவழி யாட்டும் பாரே. பொருள் : சோமசூரியாக்கினி கலைகளுடன் வாசி கலக்கச்செய்து அதை அண்டவுச்சியாகிய சுழுமுனைக்கு ஏற்றினால் மனம் தான் அலையாமல் அடங்கி ஆன்மாவில் அடங்கும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.