Sunday, May 17, 2026

அருட்பா 5 ம் திருமுறை – பிரசாத மாலை ஆன்ம தேகம் அடைவு

அருட்பா 5 ம் திருமுறை – பிரசாத மாலை ஆன்ம தேகம் அடைவு 1 விலைகடந்த மணிஎனஓர் திருமேனி தரித்து வினையேன்முன் எழுந்தருளி மெய்யடியர் விரும்பக் கலைகடந்த பொருட்கெல்லாங் கரைகடந்து நாதக் கதிகடந்த பெருங்கருணைக் கடைக்கண்மலர்ந் தருளி அலைகடந்த கடல்மலர்ந்த மணச்செழும்பூ அடியேன் அங்கைதனில் அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன் மலைகடந்த நெடுந்தோளில் இதழிஅசைந் தாட மன்றில்நடம் புரிகின்ற வள்ளல்அருட் குருவே. 2 அழகுநிறைந் திலஒரு திருமேனி தரித்தே அடியேன்முன் எழுந்தருளி அருள்நகைகொண் டடியார் கழகநடு எனைஇருத்தி அவர்க்கெல்லாம் நீறு களித்தருளி என்னளவிற் கருணைமுக மலர்ந்து குழகியற்செஞ் சுடர்ப்பூவைப் பொக்கணத்தில் எடுத்துக் கொடுத்தருளி நின்றனைநின் குறிப்பறியேன் குருவே மழகளிற்றின் உரிவிளங்க மணிப்பொதுவிற் சோதி மயவடிவோ டின்பநடம் வாய்ந்தியற்றும் பதியே. செஞ்சுடர்ப்பூ = ஆன்ம தேகம் – அதுக்கான செம்மை ஒளி இந்த மாதிரி 5ம் திருமுறை - 10 பாக்களில் வள்ளல் பெருமான் தான் ஆன்ம தேகம் எனும் சுத்த தேகம் அடைவதுக்கான சமிக் ஞைகளை ஆன்மா அருள் காட்டியதாக பாடி உறுதி செய்கையில் எல்லா சன்மார்க்க சங்க மேதைகளும் – அவர் 6 ம் திருமுறையில் தான் சுத்த சன்மார்க்கம் எனும் அரும்பெரும் நிலைக்கு வந்தார் – அதனால் அது தான் ஓத வேணும் மற்றதை ஒதுக்க வேணும் என்று இருக்கின்றார் என்ன அறிவு என்ன அறிவு ? திருவடிப்புகழ்ச்சி – 6ம் திருமுறைக்கு முன்பே அளிக்கப்பட்டது இவர்க்கு ஆராய்ச்சி எல்லாம் ஒன்றுமிலை – இல்லாமலே முடிவுக்கு வந்துவிடுகின்றார் எல்லவரும் அவரவர் ஆய்வு செய்து முடிவுக்கு வர வேணுமே அல்லாது மற்றவர் சொல் கேட்கலாகாது – என் சொல் உட்பட வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.