Sunday, May 17, 2026

அருட்பா – 5 ம் திருமுறை பிரசாத மாலை -2

அருட்பா – 5 ம் திருமுறை பிரசாத மாலை -2 உலர்ந்தமரந் தழைக்கும்ஒரு திருஉருவந் தாங்கி உணர்விலியேன் முன்னர்உவந் துறுகருணை துளும்பு மலர்ந்தமுகம் காட்டிநின்று திருநீற்றுப் பையை மலர்க்கரத்தால் அவிழ்த்தங்கு வதிந்தவர்கட் கெல்லாம் அலர்ந்ததிரு நீறளித்துப் பின்னர்என்றன் கரத்தில் அருள்மணப்பூ அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன் கலந்தவரைக் கலந்துமணிக் கனகமன்றில் நடஞ்செய் கருணைநெடுங் கடலேஎன் கண்அமர்ந்த ஒளியே. பொருள் : இந்த அருள் உருவம் பார்த்த மட்டில் - மரம் துளிர்த்துவிடும் வடிவம் தாங்கி வந்து என் தேகத்தில் அருள் மணப்பூ ஆகிய ஆன்ம ஒளி அளித்தனை – வீசச்செய்தனை ஆன்மாவே – கருணை மிக உள்ள பெருங்கடலே – என் கண் அமர்ந்த ஒளியே இந்த பாக்களில் எல்லம் தான் ஆன்ம தேகம் பெற்றதை உறுதி செய்கிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.