Wednesday, May 6, 2026

சேலம் குப்புசாமி கூறும் கண்தவப் பயிற்சிகள் -2

சேலம் குப்புசாமி கூறும் கண்தவப் பயிற்சிகள் -2 1 கட்டம் 1 முதல் நிலையில் 2 கண்களையும் முக்கோணமாக பார்வையை பொட்டு வைக்கும் இடத்தில் குவிக்கவும் – அதிலேயே நிலைக்கவும் குத்திட்டு நிற்கவும் புறு புறு என உணர்வு தோன்றும் இதை எங்கும் எப்போதும் செய்யலாம் ஓராண்டுக்கு செய்யவும் – பின் ரெண்டாம் கட்டத்துக்கு செல்லவும் 2 கட்டம் 2 இது சற்றே கடினமானது ஆபத்தானது நெற்றிக்கு உள்ளே புருவத்து இடைவெளியில் அண்ணாக்கு மேல் ஓர் இடமுண்டு அது சிற்சபை அது தெரிந்து கொள்ள – ஆயுத எழுத்தை உச்சரிக்கவும் – அந்த ஓசை எங்கே தொடங்குதோ அந்த இடம் தான் சிற்சபை எனும் ஆன்மா விளங்கும் இடம் ஆம் அங்கே கண்பார்வை கவனம் குவிக்கவும் இதைச் செய்ய செய்ய – சுவாசம் மேலேறும் – தானே ஒடுங்கும் இது வாசியோகத்தின் பலனைக்கொடுக்கும் இந்தப்பதிவு ஏனெனில் ?? நான் கண்தவத்தை வலியுறுத்தினால் என்னை சன்மார்க்க விரோதியாக சித்தரிக்கின்றார் – அப்படித்தான் பார்க்கின்றார் எல்லா சோறு மட்டும் போடத்தெரிந்த சன்மார்க்கத்தார் இப்போது பாருங்கள் – சன்மார்க்கத்தின் பெரும் புள்ளி சேலம் குப்பு சாமி கூட இதை வலியுறுத்துகின்றார் என்றால் – இதன் பெருமை மகத்துவம் அவசியம் அதுக்குத்தான் இந்தப்பதிவு கண் இல்லாமல் ஞானம் – முத்தேக சித்தி அடைவு என்பதே இல்லை நான் இந்த கண் தவத்துக்குத் தான் பொறுப்பே அன்றி – அவர் விளக்கமாகிய சிற்சபை – அதன் இடம் அதன் அனுபவத்துக்கு அல்ல என்பதை தெரிவித்தும் தெளிவிக்கிறேன் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.