Friday, May 15, 2026

புருவக்கண் பூட்டு திறக்கும் முறை காகபுசுண்டர் பெருநூல் காவியம் 1000

புருவக்கண் பூட்டு திறக்கும் முறை காகபுசுண்டர் பெருநூல் காவியம் 1000 "பூட்டுடைத்துக் கண்டவர்கள் மெத்த வுண்டு புத்தியுள்ளோர் அவர்களே சித்தர் சித்தர் ஆட்டமிதிற் காண்பார்கள் அநேகங் காட்சி அம்மம்மா வென்றார்கள் சுத்த வீரர் காட்டம் விறகெய்தாமற் தீயிடாமல் கதிர் மதிக்கு மத்தியது புருவ மத்தி நாட்டமிடக் கோபுரத்தின் வாசற் பூட்டு நாசிமுனை புருவமத்தி திறந்து கொள்ளே." விளக்கம் : சூரிய சந்திரர்க்கு நடுவே இருப்பது இந்த பூட்டு பிரணவ கோபுரத்தின் வாசல் – நாசிமுனை என்றெல்லாம் பேர் இதை திறந்தவர் வீரர் தான் ஆர் தன் நாட்டத்தை புருவமத்திமாம் இடையிலே வைத்து தவம் ஆற்றுகின்றாரோ அவர்க்கு இந்த புருவப்பூட்டு திறந்து கொள்ளும் என்றவாறு வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.