Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, May 9, 2026
இயற்கை நியதி
இயற்கை நியதி
1. நம் கர்மாவை நாமே அனுபவிக்கச் செய்வது - அதை செய்வதற்கு 36 தத்துவங்கள் துணை கொண்டு நடத்துகின்றது
2. ஒன்றைக் கொடுத்துத் தான் ஒன்றைப் பெற முடியும்
உழைப்பு கொடுத்து தான் பணம் சம்பாதிக்க முடியும்
உடற்பயிற்சி செய்து தான் ஆரோக்கியம் பெற முடியும்
அப்படியெனில் ஆன்மா - அருட்பெருஞ்சோதி அனுபவம் பெற என்ன கொடுக்க வேண்டும்??
நாம் நிறைய இழக்கத் தயாராக இருக்க வேண்டும் - நிறைய சுகங்களை இழக்கத் தயாராக இருக்க வேண்டும்
1. உடல் - பொருள் - ஆவி தத்தம் கொடுக்க வேண்டும்
2 ஜீவ - தேக - போக சுதந்திரம் விட்டுக் கொடுக்க வேண்டும்
3 அறம் - பொருள் - இன்பம் துறக்க தயாராக இருக்க வேண்டும்
இவைகள் எல்லாம் இழந்தால் தான் ஆன்மா - அருட்பெருஞ்சோதி அனுபவம் கிட்டும்
எப்படி அர்ஜுனனுக்கு குறியான பறவை மட்டும் அவன் கண்ணுக்கு தெரிந்ததோ அது போல
நம் குறிக்கோள் - எண்ணம் - இலட்சியம் எலாம் ஆன்மா - அருட்பெருஞ்சோதி ஆக மட்டும் இருக்க வேண்டும் - வேறு எந்த எண்ணம் இருக்கக் கூடாது - தடம் மாறக் கூடாது
அப்படி இருந்தால் மட்டும் ஆன்மா - அருட்பெருஞ்சோதி அனுபவம் சாத்தியம் ஆகும் - இல்லையெனில் அதனை மறந்து விட வேண்டியது தான்
br>
ெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.