Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, May 1, 2026
அருட்பா - 6ம் திருமுறை நடராஜபதி மாலை
அருட்பா - 6ம் திருமுறை
நடராஜபதி மாலை
திருச்சிற்றம்பலம்
எண்ணிலா அண்டபகி ரண்டத்தின் முதலிலே
இடையிலே கடையிலேமேல்
ஏற்றத்தி லேஅவையுள் ஊற்றத்தி லேதிரண்
டெய்துவடி வந்தன்னிலே
கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே
கருவிலே தன்மைதனிலே
கலையாதி நிலையிலே சத்திசத் தாகிக்
கலந்தோங்கு கின்றபொருளே
தெண்ணிலாக் காந்தமணி மேடைவாய்க் கோடைவாய்ச்
சேர்ந்தனு பவித்தசுகமே
சித்தெலாஞ் செயவல்ல தெய்வமே என்மனத்
திருமாளி கைத்தீபமே
துண்ணுறாச் சாந்தசிவ ஞானிகள் உளத்தே
சுதந்தரித் தொளிசெய்ஒளியே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராஜபதியே.
பொருள் :
சுத்த வெட்ட வெளியில் எண்ணிலா அண்டங்கள் – அதின் அடி – நடு – முடியின் மேலும் – அவைகளில் உருவாக – அருவாக – குருவாக கலந்து நிற்கும் பொருளே
கலைகளின் தோற்றத்தில் சத்தி சத்தர்களாகி கலந்து ஓங்கும் பொருளே
காந்தம் ஆகிய சுப்பிரமணிக்கான மேடையாகிய இடத்தில் – சுழுமுனை வாசலில் – அதனுடன் கூடி அனுபவித்த சுகமே – அவ்வாசல் அனுபவமே சுகமே
எல்லா சித்தும் இயற்ற வல்ல தெய்வமே
என் மன மாளிகையின் ஒளியே
மௌன ஞானிகள் ஆன்மாவில் ஒளிரும் ஒளியே
சுத்த சிவ சன்மார்க்க செல்வமாகிய அருட்பெருஞ்சோதி – நடம் இயற்றும் பதி ஆகிய நடராஜ பதியே என ஆடல் வல்லானின் பெருமை திறம் பாடுகிறார் வள்ளல் பெருமான்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.